Tuesday, February 26, 2008

ஆதியும் மூலமுமான ஆதிமூலம்

இரவு பத்து அல்லது பத்தரை மணி இருக்கும். ஆதிமூலம் இன்று மாலை இறந்து விட்டார் என்று நண்பர் எஸ் கே எஸ் மணியிடமிருந்து எஸ் எம் எஸ் வந்தது. பின் மறு நாள் காலை க்ரியா ராமகிருஷ்ணன், சச்சி இப்படியாக தொடர்ந்து தொலைபேசிச் செய்திகள். என்ன சொல்ல? ஒரு வெறுமை, ஒரு வேதனை, ஒரு இயலாமை, ஏதோ என்னிடமிருந்து, தமிழ் சமூகத்திடமிருந்து பறிக்கப்பட்டு விட்ட உணர்வு தாக்கியது. மிக நெருக்கமான பழக்கம் என்றும் சொல்லமுடியாது. பரிச்சயம் என்று மாத்திரம் சொல்லி அதை அவ்வளவுக்கு குறைத்துக்கொள்ளவும் முடியாது. பரிச்சயமும் பழக்கமும் தொடங்கிய கடந்த கிட்டத்தட்ட 40 ஆண்டுகளில், நேரில் பார்த்துப் பழகியது அவ்வளவு அதிகம் இல்லை தான். நீண்ட காலமாக நான தில்லியிலேயே இருந்தது காரணமாக இருக்கலாம். ஆனால் நேர் சந்திப்புகளின் எண்ணிக்கையை வைத்துக்கொண்டு மனத்தின், உறவுகளின் ஆழத்தையும் நெருக்கத்தையும் அளவிட்டு விடமுடியாது. தனி மனித உறவுகளுக்கும் மதிப்புகளுக்கும் மேல் எழுத்துலகில், கலைகள் உலகில், சமூகத்தில், நானும் அங்கம் வகிக்கும் ஒரு உறுப்பினனாக, நானும் என்னைப் போன்ற மற்றோரும் உணரும் அவரது வியாபகமும் தாக்கமும் மிகப் பெரிது. இந்த உணர்வை, அவரை நேரில் அறிந்து பழகாத தமிழர்களில் பகிர்ந்து கொள்பவர்கள் கணிசமாக இருப்பார்கள் என்றே நினைக்கிறேன். நான் இதையெல்லாம் சொல்லக் காரணம் நான் ஆதிமூலத்தைப் பற்றி எண்ணும்போது, அந்த மனிதர், அவரது படைப்புகள், அவர் வாழ்ந்த சமூகத்தின் மதிப்புகள் எல்லாவற்றையும் பின்னிப் பிணைந்த ஒரு வாழ்க்கையின் முழுமையைத் தான் எண்ணத் தோன்றுகிறது.

எப்படியோ அப்படித்தான் நானும் வளர்ந்து விட்டேன். அப்படித்தான் எதையும் பார்க்கத் தோன்றுகிறது. அதைத் தான் எழுத ஆரம்பித்ததிலிருந்தே எழுதியும் வருகிறேன். அந்த சமயத்தில் தமிழ் நாட்டில் ஓவியம், சிற்பம் பற்றி யாரும் நினைத்துப் பார்த்ததில்லை. அதிர்ஷ்ட வசமாக அந்த சமயத்தில் எழுத்து பத்திரிகையில் வந்து சேர்ந்த சச்சிதானந்தத்தை பின் வருடங்களில் சந்தித்தபோது அவருக்கு சென்னை ஒவியக் கல்லூரியுடனும், சமீக்ஷா பத்திரிகை கோவிந்தனுடனும் நெருங்கிய பழக்கமும் நட்பும் இருந்தது. இப்படி ஒன்றிரண்டு பேர்களாக, இங்கும் அங்குமாக இருந்தனரே தவிர, ஜெர்மனியில் முப்பதுக்களில் இருந்த பஹௌஸ் ஸ்கூல் போலவோ, இங்கிலாந்தில் இருந்த ப்ளூம்ஸ்பரி போலவோ, ·ப்ரான்ஸில் அபாலினேரைச் சுற்றி இருந்த, அவர் இயங்கி பாதித்த சூழல் போலவோ, ஒரு பெரும் குழுவாக, ஓவியர், கவிஞர்கள், சிந்தனையாளர், நாடகாசிரியர், அனைத்தினரையும் ஒருங்கிணைத்த சிந்தனை மையமாக இருக்கவில்லை. சுதந்திரப் போராட்ட காலத்தில், வங்காளத்தில் அது காணப்பட்டது. அறுபது எழுபதுகளில் பரோடாவை மையமாகக்கொண்ட குழு ஒன்று இயங்கியது. ஓவிய உலகில் பரோடா பள்ளியைச் சேர்ந்தவர்கள் கலகக் காரர்களாகக் கருதப்பட்டார்கள். அத்தகைய ஒன்று இங்கும் முளை விடுவதாக நான் அக்காலத்தில் எண்ணக் காரணம் எழுத்துவில் ஆரம்பித்தது, நடையில் உருப்பெற்று கசடதபறவிலும் தொடர்ந்தது தான். இப்போது எல்லாப் பத்திரிகைகளிலும் காணும் பல துறை விகாசம் எங்கு எப்போது ஆரம்பித்தது என்பது இன்றைய தலைமுறையினருக்குத் தெரியாது. தெரிந்தாலும் தெரிந்ததாகக் காண்பித்துக் கொள்ள மாட்டார்கள். எல்லாவற்றிற்கும் அவர்கள் தான் மூலவர்கள் என்று ஸ்தாபித்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம். தொடக்கத்திற்குப் போகவேண்டும்.

இந்த உறவுக்கும் பரஸ்பர அறிதலுக்கும் முக்கிய உத்வேகமாக இருந்தது ஆதிமூலம் தான். அவர் பெயரே சொல்வது போல ஆதியும் அவர் தான். மூலமும் அவர்தான். ஒரு புள்ளி பிரபஞ்சமாக விரிந்து பூதாகரிப்பது நமக்கு அன்னியமான ஒரு விஷயமில்லை. நம் மரபில் சிந்தனையில் ஊறிய விஷயம். அறுபதுகளின் இடைப்பட்ட வருஷங்களிலிருந்துதான், என் நினைவில், தமிழ் ஒவியர்களின் சித்திர கண்காட்சிகளை கூட்டாகவோ தனித்தோ பார்த்து வந்திருக்கிறேன். தில்லியில், ரவீந்திர பவனின் லலித் கலா அகாடமி ஓவியக் கூடத்தில். ஆதிமூலத்தின் கோட்டுச் சித்திரங்கள் இருந்தன. அவரோடு காட்சிக்கு வந்திருந்தவர்கள் என இப்போது என் நினைவுக்கு வருபவர்கள் என, எஸ், என் வெங்கடராமன், வரதராஜன் இருவரைத்தான் சொல்ல முடிகிறது. பெயர்கள் தான். சித்திரங்களை நினைவுக்குக் கொண்டு வரமுடியவில்லை. ஆனால் ஆதிமூலமும் அவரது சித்திரங்களும் நினைவுக்கு வரக் காரணம் அவர் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருந்ததும், பின் வருடங்களில் அவருடனான தொடர்பும் பரஸ்பர உறவும் இலக்கிய உலகிலும் விஸ்தரித்தது காரணமாக இருக்கலாம்.

அப்போதெல்லாம் தில்லியில், - நான் அக்காலத் தில்லியைப் பற்றித்தான் பேசமுடியும், - தெற்கிலிருந்து வரும் ஓவியர், சிற்பிகளைப் பற்றி அங்கு அதிகம் பேசப்படுவதில்லை. கொஞ்சம் பிந்தங்கியவர்கள் என்று அவர்களுக்கு மூக்கு வானத்தை நோக்கி உயரும். அவர்கள் கால்கள் இங்கு நிலத்தில் பாவியதில்லை. ஐரோப்பிய தாக்கம் சிந்தனையிலும் வாழ்க்கையிலும் உடையிலும் அதிகம் அவர்களுக்கு. ஸ·பாரி சூட்டும் உதட்டில் பைப்பும் ஓவியர் என்ற சீருடையை ஸ்தாபிக்கும். ஆனால் சென்னை ஓவியக் கல்லூரியிலிருந்து வந்தவர்கள் தம் மரபையும் மண்ணையும் விட்டு தம்மை அறுத்துக் கொள்ளாதவர்கள். அதற்கு அவர்கள் பள்ளியில் ஒரு ராய் சௌதுரியும் பணிக்கரும் இருந்தது காரணமாக இருக்கலாம்.

இதையெல்லாம் உடைத்து தன்னை ஸ்தாபித்துக் கொண்டவர் ஆதிமூலம். அவரது பலம் அந்நாட்களில் அவரது கோட்டுச் சித்திரங்களின் பலம் தான். அவரது திறனை இனங்கண்டு, மகிழ்ந்து, ஓவியக் கல்லூரியிலும் சேர்த்து ஆதிமூலத்தின் ஒவிய வாழ்க்கைக்கும் வழிகாட்டியாக இருந்த தனபாலே, அவரது சிஷ்யனைப் பற்றி, கிட்டத்தட்ட இந்தமாதிரி வார்த்தைகளில், சொல்கிறார். நினைவிலிருந்து எழுதுகிறேன். "நான் ஆதிக்குக் கற்றுக்கொடுத்தது ஒரு திசை காட்டலே. வழி காட்டியதும், அவன் ஐரோப்பிய மேதைகளுக்கு இணையாக கோடுகள் வரைவதில் வல்லவன். பாடத் தெரிந்து விட்டால் ராக ஆலாபனையில் தன் கற்பனையில் சொல்லிக் கொடுக்காததையும் தன்னை அறியாது பாடிவிட முடிகிறதல்லவா?" ஒரு தனபாலிடமிருந்து இது ஒரு சிஷ்யனுக்குக் கிடைக்கிறது. இந்த சிஷ்யன் ஒரு கீராம்பூர் கிராமத்தில் பிறந்து கோவில் சுவர் சித்திரங்களியும் சுட்ட மண் சிற்பங்களையும் பார்த்து வளர்ந்தவன். "நான் ஒன்றும் அறிவு ஜீவியில்லை. நான் கற்றது சித்தாந்தங்களைப் படித்து அல்ல. படைப்புகளைப் பார்த்து." என்று சொல்வார் ஆதிமூலம். இது வெற்றுத் தன்னடக்கம் இல்லை. தன்னை அறிந்த முழுமை. பந்தா இல்லாத, மூக்கு வானத்தை நோக்காத முழுமை. கீராம்பூர் கிராமத்தில் விளைந்தது லண்டனுக்கும் செல்லும் என்ற தன்னம்பிக்கையின் பிறந்த முழுமை.

இந்த எளிமையும் உண்மையும் தான் அவரை இன்றைய தமிழ்க் கூட்டத்தில் தனித்து உயர்ந்து நிற்கும் மனிதராகக் காட்டுகிறது. அவர் தன்னைச் சுற்றியோ தன் தலைக்குப் பின்னோ ஒரு ஒளி வட்டம் பிரகாசிப்பதாக எண்ணியதில்லை. ஆரம்ப காலத்திலும் சரி, கடைசி வருடங்களில் அவர் படைப்புகள் வேறு எந்த தென்னிந்தியருக்கும் கிட்டாத அளவிற்கு வியாபார வெற்றியடைந்த போதும் சரி. நான் அவரைக் கடைசியாகப் பார்த்தது சில வருடங்கள் முன்பு தான். பேசியது தொலை பேசியில் ஒரு வருடம் முன் (ஜனவரி 1907). தில்லி லலித் அகாடமி கண்காட்சி ஹாலில்(1960களின் பின் பாதி) பார்த்துப் பேசிய அதே ஆதி மூலம் தான். இப்போது கொஞ்சம் நெருக்கமும் பரஸ்பர புரிதலும் அதிகம். முதல் சந்திப்பில் அவர் என்னை யாரென்று அறிந்திருப்பாரோ என்னவோ. ஆனால், அடுத்த சந்திப்பு(1973) சென்னை மௌபரீஸ் ரோடில் என்று நினைக்கிறேன். அப்போது அந்தப் பெயரில்தான் அந்த ரோடு இருந்தது. நான் தங்கியிருந்த உறவினர் வீட்டு வாசலில் தற்செயலாக. "அட இங்கு வந்திருக்கி றீர்களா?எவ்வளவு நாட்கள் இருப்பீர்கள்? வாருங்களேன் சாவகாசமாக பேசலாம். இடம் தெரியாதா? சச்சிக்குத் தெரியுமே. அவரோடு வாருங்கள்" எல்லாம் விசாரித்து, கேட்டு அவரே பதில்களும் பிரச்சினைகளுக்குத் தீர்வும் சொல்லியாயிற்று. போனோம் நானும் சச்சிதானந்தமும். நான் அன்று தங்கி இருக்குமிடத்திற்கு நாங்கள் இருவரும் நடந்தே திரும்பினோம். எழும்பூர் Weavers" Centre, -லிருந்து தியாகராய நகர் திருமலைப் பிள்ளை ரோடில் சச்சி எனக்குத் தங்க ஏற்பாடு செய்திருந்த வீட்டிற்கு. தில்லி ரவீந்திர பவன் புல்வெளியில், தில்லி ப்ரெஸ் க்ளப்பில், அவர் ஒரு காலத்தில் இருந்த அடையாறு வீட்டின் முதல் தளத்தில். ஓவ்வொரு முறையும் நிறைய பேச்சும் அவர் வரைந்திருந்த ஓவியங்களைப் பார்ப்பதுமாக பொழுதுகள் போகும். சென்னை வந்த பிறகு நண்பர்களின் வீட்டுக் கல்யாணங்களில். பூந்தமல்லி ஹை ரோடு ஹோட்டலில்(ஹோட்டல் எவரெஸ்டா? நினைவில் இல்லை) முத்துக் கோயா, பிரபஞ்சன், பாஸ்கரனோடு. என் புத்தகங்களுக்கு வரைந்து அவர் கொடுத்தது, நான் நேரில் கேட்டு அல்ல. செல்லப்பாவோ, சச்சிதானந்தமோ அல்லது வேறு யாருமோ கேட்டு. ஒரு முன்னனணி ஓவியரைக் கேட்பது போல அல்ல. ஒரு நண்பரிடம் ஏதோ ஒரு வேலையை நமக்காகச் செய்யச் சொல்வது போல. ஒரு பந்தாவும் இல்லாத மனிதர். இதனால் அவர் பெற்றது ஏதும் கிடையாது. வியாபாரக் கணக்கில் ஒரு பைசா வரவில்லாத விஷயம். இது அறுபதுகளில் இருந்து தொடங்கி இறுதி மூச்சு வரை தொடர்ந்தது. அந்தக் காலத்தில் நடை பத்திரிகைக்கு அவரிடம் கேட்ட போது, அதனால் விளம்பரமும் கிடையாது. பண வருவாயும் கிடையாது. பிரக்ஞையுள்ள ஒரு சிறு வட்டத்திற்குள் ஒரு சலனத்தை, ஒரு பரிச்சயத்தை, ஒரு தெரிவை ஏற்படுத்துவது என்பதே நோக்கம். அவ்வளவே. அவரைத் தொடர்ந்து எண்ணற்ற பலரும் அதற்கு முன் வந்தனர். 1961-ல் எழுத்து பத்திரிகையில் ஒரு சிந்தனை வெளிப்பாடாகத் தொடங்கியது, பின் வருடங்களில் படிப்படியாக சின்ன முயற்சிகளாக இன்னும் பலர் சேர்ந்து செயல்பட்டது, இன்று ஒரு பகுதி சமூகத்தின் ஒட்டு மொத்த செயல்பாடாக வளர்ந்து பெருகியுள்ளது. கலை உணர்வு வளர்ந்துள்ளது, ஆழம் பெற்றுள்ளது என்று சொல்ல மாட்டேன். தெரிந்தும், பல இடங்களில் தெரியாமலும் அதன் மதிப்பு உயர்ந்துள்ளது. "இதென்னங்க ஒரே கிறுக்கலா இருக்கு. இதெல்லாம் அட்டையிலே போட்டா யார் வாங்குவாங்க? என்ற நிலையிலிருந்து, "இதெல்லாந்தாங்க இப்ப போடறாங்க, இதுக்கு ஒரு மதிப்பு இருக்குங்க," என்று அடுத்த பத்து பதினைந்து வருடங்களில் மாறி, இப்போது, "ஆதிமூலத்துகிட்டே போயி நானே இந்த மூணு புத்தகத்துக்கும் வரைஞ்சி வாங்கிட்டு வந்திடறேங்க, அப்பத்தான் நல்லா இருக்கும்" என்று ஆவலோடு முதலாளியே சொல்லும் நிலைக்கு வந்துள்ளது. தெரிவு மாத்திரமல்ல. அது ஒரு சிறு வட்டத்திற்குள் தான் சிறைபடும். ஆனால் snobbery நிறைந்த பலனைக் கொடுக்கும். பணம், செல்வாக்கு இத்யாதி. பாமரத்தனமான அலங்கோலமாக இருந்த புத்தக வெளியீட்டில் தனக்கே உரிய எளிமையைக் குணமாக்கினார் செல்லப்பா. அதற்கு தொழில் நுட்பத்தோடு கலை என்ற பரிமாணத்தையும் தரத் தொடங்கியது க்ரியா ராமகிருஷ்ணன். அதற்கும் அவருக்கு உதவியது ஆதிமூலம் தான். அந்த சிரமம் மிக்க, பலர் நகையாடிய ஆரம்பங்கள் இன்று எங்கு புத்தக வெளியீட்டுத் துறையை கொண்டு வைத்துள்ளது?

இது வேறு எங்கும் நடந்ததில்லை. நடந்திராது. புத்தகங்களுக்கு மாத்திரமில்லை. ஒவ்வொரு கான்வாஸ¥ம் பல பத்து லட்சங்களுக்கு விலை போகும், இன்று கடந்த முப்பது நாற்பது வருடங்களாக, ஆதி மூலம் தன் நண்பர்களுக்கு, அவ்வப்போது அன்புடன் கொடுத்துள்ளது எண்ணிக்கையில், அடங்காது. அவற்றின் பொருள் மதிப்பீட்டை அவரவர் யூகத்திற்கு விட்டு விடலாம்.. ஆனால் ஆதி மூலம் 70 களில் நான் பார்த்த ஆதி மூலம் தான்.

பல விஷயங்களை தமிழ்ச் சூழலின் சந்தர்ப்பத்தில் சொல்லத் தோன்றுகிறது. "நான் அறிவு ஜீவி இல்லை. நான் படித்துக் கற்றுக்கொள்ளவில்லை. உலகக் கலைப் படைப்புக்களைப் பார்த்துக் கற்று வளர்ந்தவன்," என்று தன்னைப் பற்றிச் சொல்லும் ஆதிமூலத்தின் வளர்ச்சியை, அவர் படைப்புக்களின் அவ்வப்போதைய சீரான மாற்றங்களில் பார்க்கலாம். தமிழ் மண்ணும் இந்திய ஓவிய மரபும் கோடுகளின் ஆதாரத்தில் பிறந்தவை. ஆதிமூலம் தன் உள்ளார்ந்த திறமையைக் கண்டுணர்ந்தது, சிறு வயதில் தன் கிராமத்தில் கண்ட சுதைச் சிற்பங்களை, சுவர் ஓவியங்களைக் கண்டு. அவரது வரை கோட்டுத் திறன் தன் வளர்ச்சியில் ஐரோப்பிய மேதைகளுக்கு இணையானது என்று தனபாலையே சொல்ல வைத்துள்ளது. வடநாட்டில், நகரங்களில் கால் வைத்த போது பொதுவாகவே தென்னாட்டு படைப்புக்கள் வரைகோடு சார்ந்து, உருவார்த்த குணம் சார்ந்திருப்பதன் காரணத்தால் ஏளனமாகப் பார்க்கப்பட்டபோதிலும் அவர் தன்னை வழி மாற்றிக்கொள்ளவில்லை. விஷயம் என்னவென்றால், அவர்கள் எப்போதாவது தம் வரைகோட்டுத் திறனை வெளிக்காட்டு சந்தர்ப்பம் நேரும்போது பார்த்தால் அவர்களது பலவீனமும் வெளிப்படுவதைப் பார்த்திருக்கிறேன். வரைகோடுகளின் ராஜ்யத்தில் ஆதிமூலம் மன்னன். அவரது வரைகோட்டுச் சித்திரங்கள் தம்மில் முழுமை பெற்றவை. நாடகார்த்தம், வீரியம், கொடூரம், மிருக பலம், கவித்வம், மெல்லிய இழையோட்டம் ஆகிய எல்லா குணங்களையும் அவை காட்ட வல்லவை. அவை வெளியையும் வெளியை நிரப்பும் திடத்தன்மையும் வெளிக்காட்ட வல்லவை. இவ்வளவுக்கும் ஆதிமூலம் தன்னை தன் இயல்பான வளர்ச்சியில் கண்டவர் தான். வெகு வருடங்களுக்கு அவர் கோட்டுச் சித்திரங்களை விட்டு நகரவில்லை. சில சமயங்களில் வண்ணங்கள் வாங்க பொருள் வசதியின்மையால் தான் என்று சொன்னதாகச் சொல்லப்படுகிறது. அது ஒரு காரணமாக இருந்திருக்கலாம். இருந்தாலும், அது ஒரு குறையாக இருந்ததில்லை. அந்தப் புள்ளியிலிருந்து இன்று அவரது உருவத்தைக் கடந்த வண்ணவெளி என்று சொல்லத்தக்க ஓவியங்கள் வரை அந்த மாற்றத்தின் பாதையை படிப்படியாகப் பார்த்தோமானால், ஒரு மாற்றம் அதன் முந்திய நிலையின் அம்சங்களைக்கொண்டே பிறந்து வெளிப்பட்டுள்ளதைக் காணலாம். எதுவும் முந்தியதை அறவே மறுத்து ஒதுக்கி, புதிதாகப் பிறந்ததல்ல. இயல்பான வளர்ச்சியில் எந்த புதியதும் முற்றிலும் புதியதல்ல. எந்த பழையதும் முற்றிலும் பழையதுமல்ல. பழையதின் குணத்தைக் கொண்டிராத புதியதும் இல்லை. புதியதன் குணத்தைத் தன்னுள் கொண்டிராத பழையதும் ஏதும் இல்லை. ஆதிமூலத்தின் 40 வருட கால ஓவிய வாழ்க்கையே அவரது தன்னின் மலர்ச்சிதான்.
எவ்வெத்துறையிலோ சிற்பிகளை, ஓவியர்களை, கலைஞர்களை நாம் தமிழ் நாட்டில் விருது அளித்து, ஆடிக் கொண்டாடி முடிசூட்டிக் கொண்டாடி வருகிறோம். ஓவியத்துறையில் நாம் பெற்றுள்ள ஒரு தலைசிறந்த கலைஞரை, நாம் கலைஞராக காணவும் இல்லை. ஒரு கட்டத்தில் நாம் விருது பெறாத, ஏதோ ஒன்றிற்கு சிற்பியோ மன்னனோ, அரசோ இல்லாத ஒரு தமிழனைக் காண்பது சிரமமாக இருக்கும் போலிருக்கிறது. ஆனால் ஒரு கலைமாமணியாகக் கூட ஆதிமூலத்தை நாம் காணவில்லை. உண்மையில் பார்க்கப் போனால், அரசியல் சார்பு இருந்தால் ஒழிய ஓவியர்களும் சிற்பிகளும் தமிழ் நாட்டு அரசுகளுக்கு பெருமைப் படும் ஜீவன்களாகத் தெரிவதில்லை. ஆனால் எனக்குத் தோன்றுகிறது. அரசும் வாணிகமும், அரசியலும் இதில் தலையிடாதது நல்லதாகத்தான் இருந்திருக்கிறது. இல்லையெனில் சினிமாவிலும் (இது தான் தமிழ் நாட்டுக் கலை) நாடகத்திலும், இலக்கியத்திலும் நேர்ந்த பாமரத்தனமான விளைவுகளை ஓவிய சிற்ப உலகிலும் கண்டிருப்போம். எல்லாத் துறைகளிலும் இது போன்று அரசிடமிருந்தும், அரசியல் வாதிகளிடமிருந்தும் ஒரு காருண்யமிகுந்த அலட்சியம் (benign neglect) இருந்திருந்தால் எத்தனையோ பேரரசுகள், மன்னர்கள், திலகங்களிடமிருந்து தமிழ் நாடு தப்பிப் பிழைத்திருக்கும்.
ஆனால், ஆதிமூலம் இது பற்றியெல்லாம் கவலைப்பட்டவரில்லை. அது பற்றிய சிந்தனையே அவருக்கு இருந்ததில்லை. ஒரு கட்டத்தில் திருக்குறள் ஒன்றிற்கு அவர் ஏன் ஓவியம் வரைந்து கொடுத்தார் என்று நான் எண்ணியதுண்டு. அவர் அதை அமைதியாக மறுத்திருக்க முடியாது என்றே தோன்றுகிறது. அந்த கலவரத்தை அவர் விரும்பாத காரணத்தால் தான் அவர் இயல்புக்கு விரோதமான ஒன்றைச் செய்தார் என்றும் தோன்றிற்று. அவர் பந்தா அற்றவர் மட்டும் அல்ல. அமைதியானவர். அமைதியாக, தன் இயல்புக்கான செயல்களைச் செய்து வாழ்ந்தவர். யாரிடமும் அவர் கோபம் கொண்டதாக, எது பற்றியும் அவர் சீற்றம் கொண்டதாக செய்தியில்லை. நான் தில்லியில் இருந்த காலத்தில் அவர் மத்திய லலித் கலா அகாடமிக்கான் சில பொறுப்புகளை வகித்ததுண்டு. அது அவரை வந்தடைந்தது அபூர்வமே. வட இந்தியர்கள் அவ்வளவு சுலபமாக விட்டுக்கொடுக்க மாட்டார்கள். அப்போதெல்லாம் அவர் அலட்சியத்துடன் ஒதுக்கப்பட்டு வந்த தென்னிந்திய ஓவியர்கள் சிற்பிகளை கவனத்தில் கொண்டு வர முயன்ற காரணத்தாலே வட இந்தியர்களிடையே சச்சரவுக்காளானார் என்றும் தெரிந்தது. எது பற்றியும் அவருக்குக் கவலை இல்லை. எந்த பதவியையும் பரிசையும், விருதையும், கௌரவத்தையும் அவர் நாடிச் சென்றதில்லை. அவர் அடைந்த வெற்றிகள் அவர் படைப்புகளுக்குக் கிடைத்த வெற்றி. அவர் படைப்புகள் அவரது ஆளுமையின் வெளிப்பாடுகள். வியாபார வெற்றி அவரை வந்தடைந்ததே தவிர அதை நாடி அவர் தன் படைப்பின் அதற்கான வழிமுறைகளைத் தேடியவரில்லை. இப்படி இந்திய பரப்பளவில் எத்தனை கலைஞர்களைப் பற்றிச் சொல்லமுடியும் என்று தெரியவில்லை.

ஒரு புள்ளிதான் தன் விகசிப்பில் பிரபஞ்ச பரிமாணம் பெறுகிறது என்றேன். தன் சிறுவயது கீராம்பூர் கோவிலும் அதன் சுவர் ஓவியங்களும், சுதைச் சிற்பங்களும், கிராமக் காட்சிகளும் மக்களும் என்று தொடங்கி சென்னை கலைக் கல்லூரி வாழ்க்கையின் காட்சிகளும் மனிதர்களும் (ராமானுஜம்), தான் வியந்த பிக்காசோக்களும், செகாலும், காந்தியும், மகாராஜாக்களும் என்று கடந்து, விரிந்த வெளியும் அதில் மிதக்கும் உருவங்களும் என அந்தப் புள்ளிதான் இப்படி பரிமாணம் பெற்றுள்ளது.

ஆதி மூலம் நிறைய படைப்புகளை, ஓவியக் கூடங்களில், வணிக நிறுவனங்களில், தனி நபர்களிடம், இந்திய, அன்னிய நாட்டு கலைக்கூடங்களில் விட்டுச் சென்றிருக்கிறார். அவை மொத்தமும் தமிழரின் கலைத் திறனுக்கு அடையாளமாக இருக்கும். அவ்வாறு கருதப்படும் ஒரு காலம் வரும். பிக்காஸோ ஸ்பெயினுக்கும் வான் கோ டச்சுக்கும் அடையாளமாகியிருப்பதைப் போல

.
வெங்கட் சாமிநாதன்/17.1.08



ஆதியும் மூலமுமான ஆதிமூலம்வெங்கட் சாமிநாதன்
இரவு பத்து அல்லது பத்தரை மணி இருக்கும். ஆதிமூலம் இன்று மாலை இறந்து விட்டார் என்று நண்பர் எஸ் கே எஸ் மணியிடமிருந்து எஸ் எம் எஸ் வந்தது. பின் மறு நாள் காலை க்ரியா ராமகிருஷ்ணன், சச்சி இப்படியாக தொடர்ந்து தொலைபேசிச் செய்திகள். என்ன சொல்ல? ஒரு வெறுமை, ஒரு வேதனை, ஒரு இயலாமை, ஏதோ என்னிடமிருந்து, தமிழ் சமூகத்திடமிருந்து பறிக்கப்பட்டு விட்ட உணர்வு தாக்கியது. மிக நெருக்கமான பழக்கம் என்றும் சொல்லமுடியாது. பரிச்சயம் என்று மாத்திரம் சொல்லி அதை அவ்வளவுக்கு குறைத்துக்கொள்ளவும் முடியாது. பரிச்சயமும் பழக்கமும் தொடங்கிய கடந்த கிட்டத்தட்ட 40 ஆண்டுகளில், நேரில் பார்த்துப் பழகியது அவ்வளவு அதிகம் இல்லை தான். நீண்ட காலம் தில்லியில் இருந்தது காரணமாக இருக்கலாம். ஆனால் நேர் சந்திப்புகளின் எண்ணிக்கையை வைத்துக்கொண்டு மனத்தின், உறவுகளின் ஆழத்தை நெருக்கத்தை அளவிட்டு விடமுடியாது. தனி மனித உறவுகளுக்கும் மதிப்புகளுக்கும் மேல் எழுத்துலகில், கலைகள் உலகில், சமூகத்தில், நானும் அங்கம் வகிக்கும் ஒரு உறுப்பினனாக, நானும் என்னைப் போன்ற மற்றோரும் உணரும் அவரது வியாபகமும் தாக்கமும் மிகப் பெரிது. இந்த உணர்வை, அவரை நேரில் அறிந்து பழகாத தமிழர்களில் பகிர்ந்து கொள்பவர்கள் கணிசமாக இருப்பார்கள் என்றே நினைக்கிறேன். நான் இதையெல்லாம் சொல்லக் காரணம் நான் ஆதிமூலத்தைப் பற்றி எண்ணும்போது, அந்த மனிதர், அவரது படைப்புகள், அவர் வாழ்ந்த சமூகத்தின் மதிப்புகள் எல்லாவற்றையும் பின்னிப் பிணைந்த ஒரு வாழ்க்கையின் முழுமையைத் தான் எண்ணத் தோன்றுகிறது.
எப்படியோ அப்படித்தான் நானும் வளர்ந்து விட்டேன். அப்படித்தான் எதையும் பார்க்கத் தோன்றுகிறது. அதைத் தான் எழுத ஆரம்பித்ததிலிருந்தே எழுதியும் வருகிறேன். அந்த சமயத்தில் தமிழ் நாட்டில் ஓவியம், சிற்பம் பற்றி யாரும் நினைத்துப் பார்த்ததில்லை. அதிர்ஷ்ட வசமாக அந்த சமயத்தில் எழுத்து பத்திரிகையில் வந்து சேர்ந்த சச்சிதானந்தத்தை பின் வருடங்களில் சந்தித்தபோது அவருக்கு சென்னை ஒவியக் கல்லூரியுடனும், சமீக்ஷா பத்திரிகை கோவிந்தனுடனும் நெருங்கிய பழக்கமும் நட்பும் இருந்தது. இப்படி ஒன்றிரண்டு பேர்களாக இங்கும் அங்குமாக இருந்தனரே தவிர, ஜெர்மனியில் முப்பதுக்களில் இருந்த பஹௌஸ் ஸ்கூல் போலவோ, இங்கிலாந்தில் இருந்த ப்ளூம்ஸ்பரி போலவோ, ·ப்ரான்ஸில் அபாலினேரைச் சுற்றி இருந்த, அவர் இயங்கி பாதித்த சூழல் போலவோ, ஒரு பெரும் குழுவாக, ஓவியர், கவிஞர்கள், சிந்தனையாளர், நாடகாசிரியர், அனைத்தினரையும் ஒருங்கிணைத்த சிந்தனை மையமாக இருக்கவில்லை. சுதந்திரப் போராட்ட காலத்தில், வங்காளத்தில் அது காணப்பட்டது. அறுபது எழுபதுகளில் பரோடாவை மையமாகக்கொண்ட குழு ஒன்று இயங்கியது. ஓவிய உலகில் பரோடா பள்ளியைச் சேர்ந்தவர்கள் கலகக் காரர்களாகக் கருதப்பட்டார்கள். அத்தகைய ஒன்று இங்கும் முளை விடுவதாக நான் அக்காலத்தில் எண்ணக் காரணம் எழுத்துவில் ஆரம்பித்தது, நடையில் உருப்பெற்று கசடதபறவிலும் தொடர்ந்தது தான். இப்போது எல்லாப் பத்திரிகைகளிலும் காணும் பல துறை விகாசம் எங்கு எப்போது ஆரம்பித்தது என்பது இன்றைய தலைமுறையினருக்குத் தெரியாது. தெரிந்தாலும் தெரிந்ததாகக் காண்பித்துக் கொள்ள மாட்டார்கள். எல்லாவற்றிற்கும் அவர்கள் தான் மூலவர்கள் என்று ஸ்தாபித்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம். தொடக்கத்திற்குப் போகவேண்டும்.
இந்த உறவுக்கும் பரஸ்பர அறிதலுக்கும் முக்கிய உத்வேகமாக இருந்தது ஆதிமூலம் தான். அவர் பெயரே சொல்வது போல ஆதியும் அவர் தான். மூலமும் அவர்தான். ஒரு புள்ளி பிரபஞ்சமாக விரிந்து பூதாகரிப்பது நமக்கு அன்னியமான ஒரு விஷயமில்லை. நம் மரபில் சிந்தனையில் ஊறிய விஷயம். அறுபதுகளின் இடைப்பட்ட வருஷங்களிலிருந்துதான், என் நினைவில், தமிழ் ஒவியர்களின் சித்திர கண்காட்சிகளை கூட்டாகவோ தனித்தோ பார்த்து வந்திருக்கிறேன். தில்லியில், ரவீந்திர பவனின் லலித் கலா அகாடமி ஓவியக் கூடத்தில். ஆதிமூலத்தின் கோட்டுச் சித்திரங்கள் இருந்தன. அவரோடு காட்சிக்கு வந்திருந்தவர்கள் என இப்போது என் நினைவுக்கு வருபவர்கள் என எஸ், என் வெங்கடராமன், வரதராஜன் இருவரைத்தான் சொல்ல முடிகிறது. பெயர்கள் தான். சித்திரங்களை நினைவுக்குக் கொண்டு வரமுடியவில்லை. ஆனால் ஆதிமூலமும் அவரது சித்திரங்களும் நினைவுக்கு வரக் காரணம் அவர் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருந்ததும், பின் வருடங்களில் அவருடனான தொடர்பும் பரஸ்பர உறவும் இலக்கிய உலகிலும் விஸ்தரித்தது காரணமாக இருக்கலாம்.
அப்போதெல்லாம் தில்லியில், - நான் அக்காலத் தில்லியைப் பற்றித்தான் பேசமுடியும், - தெற்கிலிருந்து வரும் ஓவியர், சிற்பிகளைப் பற்றி அங்கு அதிகம் பேசப்படுவதில்லை. கொஞ்சம் பிந்தங்கியவர்கள் என்று அவர்களுக்கு மூக்கு வானத்தை நோக்கி உயரும். அவர்கள் கால்கள் இங்கு நிலத்தில் பாவியதில்லை. ஐரோப்பிய தாக்கம் சிந்தனையிலும் வாழ்க்கையிலும் உடையிலும் அதிகம் அவர்களுக்கு. ஸ·பாரி சூட்டும் உதட்டில் பைப்பும் ஓவியர் என்ற சீருடையை ஸ்தாபிக்கும். ஆனால் சென்னை ஓவியக் கல்லூரியிலிருந்து வந்தவர்கள் தம் மரபையும் மண்ணையும் விட்டு தம்மை அறுத்துக் கொள்ளாதவர்கள். அதற்கு அவர்கள் பள்ளியில் ஒரு ராய் சௌதுரியும் பணிக்கரும் இருந்தது காரணமாக இருக்கலாம்.
இதையெல்லாம் உடைத்து தன்னை ஸ்தாபித்துக் கொண்டவர் ஆதிமூலம். அவரது பலம் அந்நாட்களில் அவரது கோட்டுச் சித்திரங்களின் பலம் தான். அவரது திறனை இனங்கண்டு, மகிழ்ந்து, ஓவியக் கல்லூரியிலும் சேர்த்து ஆதிமூலத்தின் ஒவிய வாழ்க்கக்கு வழிகாடியாக இருந்த தனபாலே, அவரது சிஷ்யனைப் பற்றி, கிட்டத்தட்ட இந்தமாதிரி வார்த்தைகளில், சொல்கிறார். நினைவிலிருந்து எழுதுகிறேன். "நான் ஆதிக்குக் கற்றுக்கொடுத்தது ஒரு திசை காட்டலே. வழி காட்டியதும் அவன் ஐரோப்பிய மேதைகளுக்கு இணையாக கோடுகள் வரைவதில் வல்லவன். பாடத் தெரிந்து விட்டால் ராக ஆலாபனையில் தன் கற்பனையில் சொல்லிக்கொடுக்காததையும் தன்னை அறியாது பாடிவிடமுடிகிறதல்லவா?" ஒரு தனபாலிடமிருந்து இது ஒரு சிஷ்யனுக்குக் கிடைக்கிறது. இந்த சிஷ்யன் ஒரு கீராம்பூர் கிராமத்தில் பிறந்து கோவில் சுவர் சித்திரங்களியும் சுட்ட மண் சிற்பங்களையும் பார்த்து வளர்ந்தவன். "நான் ஒன்றும் அறிவு ஜீவியில்லை. நான் கற்றது சித்தாந்தங்களைப் படித்து அல்ல. படைப்புகளைப் பார்த்து." என்று சொல்வார் ஆதிமூலம். இது வெற்றுத் தன்னடக்கம் இல்லை. தன்னை அறிந்த முழுமை. பந்தா இல்லாத, மூக்கு வானத்தை நோக்காத முழுமை. கீராம்பூர் கிராமத்தில் விளைந்தது லண்டனுக்கும் செல்லும் என்ற தன்னம்பிக்கையின் பிறந்த முழுமை.
இந்த எளிமையும் உண்மையும் தான் அவரை இன்றைய தமிழ்க் கூட்டத்தில் தனித்து உயர்ந்து நிற்கும் மனிதராகக் காட்டுகிறது. அவர் தன்னைச் சுற்றியோ தன் தலைக்குப் பின்னோ ஒரு ஒளி வட்டம் பிரகாசிப்பதாக எண்ணியதில்லை. ஆரம்ப காலத்திலும் சரி, கடைசி வருடங்களில் அவர் படைப்புகள் வேறு எந்த தென்னிந்தியருக்கும் கிட்டாத அளவிற்கு வியாபார வெற்றியடைந்த போதும் சரி. நான் அவரைக் கடைசியாகப் பார்த்தது சில வருடங்கள் முன்பு தான். பேசியது தொலை பேசியில் ஒரு வருடம் முன்(ஜனவரி 1907). தில்லி லலித் அகாடமி கண்காட்சி ஹாலில்(1960களின் பின் பாதி) பார்த்துப் பேசிய அதே ஆதி மூலம் தான். இப்போது கொஞ்சம் நெருக்கமும் பரஸ்பர புரிதலும் அதிகம். முதல் சந்திப்பில் அவர் என்னை யாரென்று அறிந்திருப்பாரோ என்னவோ. ஆனால், அடுத்த சந்திப்பு(1973) சென்னை மௌபரீஸ் ரோடில் என்று நினைக்கிறேன். அப்போது அந்தப் பெயரில்தான் அந்த ரோடு இருந்தது. நான் தங்கியிருந்த உறவினர் வீட்டு வாசலில் தற்செயலாக. "அட இங்கு வந்திருக்கி றீர்களா?எவ்வளவு நாட்கள் இருப்பீர்கள்? வாருங்களேன் சாவகாசமாக பேசலாம். இடம் தெரியாதா? சச்சிக்குத் தெரியுமே. அவரோடு வாருங்கள்" எல்லாம் விசாரித்து, கேட்டு அவரே பதில்களும் பிரச்சினைகளுக்குத் தீர்வும் சொல்லியாயிற்று. போனோம் நானும் சச்சிதானந்தமும். நான் இருக்குமிடத்திற்கு நாங்கள் இருவரும் நடந்தே திரும்பினோம். எழும்பூர் Weavers" Centre, -லிருந்து தியாகராய நகர் திருமலைப் பிள்ளை ரோடில் சச்சி எனக்குத் தங்க ஏற்பாடு செய்திருந்த வீட்டிற்கு. தில்லி ரவீந்திர பவன் புல்வெளியில், தில்லி ப்ரெஸ் க்ளப்பில், அவர் ஒரு காலத்தில் இருந்த அடையாறு வீட்டின் முதல் தளத்தில். ஓவ்வொரு முறையும் நிறைய பேச்சும் அவர் வரைந்திருந்த ஓவியங்களைப் பார்ப்பதுமாக பொழுதுகள் போகும். சென்னை வந்த பிறகு நண்பர்களின் வீட்டுக் கல்யாணங்களில். பூந்தமல்லி ஹை ரோடு ஹோட்டலில்(ஹோட்டல் எவரெஸ்டா? நினைவில் இல்லை) முத்துக் கோயா, பிரபஞ்சன், பாஸ்கரனோடு. என் புத்தகங்களுக்கு வரைந்து கொடுத்தது, நான் நேரில் கேட்டு அல்ல. செல்லப்பாவோ, சச்சிதானந்தமோ அல்லது வேறு யாருமோ கேட்டு. ஒரு முன்னனணி ஓவியரைக் கேட்பது போல அல்ல. ஒரு நண்பரிடம் ஏதோ ஒரு வேலையை நமக்காகச் செய்யச் சொல்வது போல. ஒரு பந்தாவும் இல்லாத மனிதர். இதனால் அவர் பெற்றது ஏதும் கிடையாது. வியாபாரக் கணக்கில் ஒரு பைசா வரவில்லாத விஷயம். இது அறுபதுகளில் இருந்து தொடங்கி இறுதி மூச்சு வரை தொடர்ந்தது. அந்தக் காலத்தில் நடை பத்திரிகைக்கு அவரிடம் கேட்ட போது, அதனால் விளம்பரமும் கிடையாது. பண வருவாயும் கிடையாது. பிரக்ஞையுள்ள ஒரு சிறு வட்டத்திற்குள் ஒரு சலனத்தை, ஒரு பரிச்சயத்தை, ஒரு தெரிவை ஏற்படுத்துவது என்பதே நோக்கம். அவ்வளவே. அவரைத் தொடர்ந்து எண்ணற்ற பலரும் அதற்கு முன் வந்தனர். 1961-ல் எழுத்து பத்திரிகையில் ஒரு சிந்தனை வெளிப்பாடாகத் தொடங்கியது, பின் வருடங்களில் படிப்படியாக சின்ன முயற்சிகளாக இன்னும் பலர் சேர்ந்து செயல்பட்டது, இன்று ஒரு பகுதி சமூகத்தின் ஒட்டு மொத்த செயல்பாடாக வளர்ந்து பெருகியுள்ளது. கலை உணர்வு வளர்ந்துள்ளது, ஆழம் பெற்றுள்ளது என்று சொல்ல மாட்டேன். தெரிந்தும், பல இடங்களில் தெரியாமலும் அதன் மதிப்பு உயர்ந்துள்ளது. "இதென்னங்க ஒரே கிறுக்கலா இருக்கு. இதெல்லாம் அட்டையிலே போட்டா யார் வாங்குவாங்க? என்ற நிலையிலிருந்து, "இதெல்லாந்தாங்க இப்ப போடறாங்க, இதுக்கு ஒரு மதிப்பு இருக்குங்க," என்று அடுத்த பத்து பதினைந்து வருடங்களில் மாறி, இப்போது, "ஆதிமூலத்துகிட்டே போயி நானே இந்த மூணு புத்தகத்துக்கும் வரைஞ்சி வாங்கிட்டு வந்திடறேங்க, அப்பத்தான் நல்லா இருக்கும்" என்று ஆவலோடு முதலாளியே சொல்லும் நிலக்கு வந்துள்ளது. தெரிவு மாத்திரமல்ல. அது ஒரு சிறு வட்டத்திற்குள் தான் சிறைபடும். ஆனால் snobbery நிறைந்த பலனைக் கொடுக்கும். பணம், செல்வாக்கு இத்யாதி. பாமரத்தனமான அலங்கோலமாக இருந்த புத்தக வெளியீட்டில் தனக்கே உரிய எளிமையைக் குணமாக்கினார் செல்லப்பா. அதற்கு தொழில் நுட்பத்தோடு கலை என்ற பரிமாணத்தையும் தரத் தொடங்கியது க்ரியா ராமகிருஷ்ணன். அதற்கும் அவருக்கு உதவியது ஆதிமூலம் தான். அந்த சிரமம் மிக்க, பலர் நகையாடிய ஆரம்பங்கள் இன்று எங்கு புத்தக வெளியீட்டுத் துறையை கொண்டு வைத்துள்ளது?
இது வேறு எங்கும் நடந்ததில்லை. நடந்திராது. புத்தகங்களுக்கு மாத்திரமில்லை. ஒவ்வொரு கான்வாஸ¥ம் பல பத்து லட்சங்களுக்கு விலை போகும், இன்று கடந்த முப்பது நாற்பது வருடங்களாக, ஆதி மூலம் தன் நண்பர்களுக்கு, அவ்வப்போது அன்புடன் கொடுத்துள்ளது எண்ணிக்கையில், அடங்காது. அவற்றின் பொருள் மதிப்பீட்டை அவரவர் யூகத்திற்கு விட்டு விடலாம்.. ஆனால் ஆதி மூலம் 70 களில் நான் பார்த்த ஆதி மூலம் தான்.
பல விஷயங்களை தமிழ்ச் சூழலின் சந்தர்ப்பத்தில் சொல்லத் தோன்று கிறது. "நான் அறிவு ஜீவி இல்லை. நான் படித்துக் கற்றுக்கொள்ளவில்லை. உலகக் கலைப் படைப்புக்களைப் பார்த்துக் கற்று வளர்ந்தவன்," என்று தன்னைப் பற்றிச் சொல்லும் ஆதிமூலத்தின் வளர்ச்சியை, அவர் படைப்புக்களின் அவ்வப்போதைய சீரான மாற்றங்களில் பார்க்கலாம். தமிழ் மண்ணும் இந்திய ஓவிய மரபும் கோடுகளின் ஆதாரத்தில் பிறந்தவை. ஆதிமூலம் தன் உள்ளார்ந்த திறமையைக் கண்டுணர்ந்தது, சிறு வயதில் தன் கிராமத்தில் கண்ட சுதைச் சிற்பங்களை, சுவர் ஓவியங்களைக் கண்டு. அவரது வரை கோட்டுத் திறன் தன் வளர்ச்சியில் ஐரோப்பிய மேதைகளுக்கு இணையானது என்று தனபாலையே சொல்ல வைத்துள்ளது. வடநாட்டில், நகரங்களில் கால் வைத்த போது பொதுவாகவே தென்னாட்டு படைப்புக்கள் வரைகோடு சார்ந்து, உருவார்த்த குணம் சார்ந்திருப்பதன் காரணத்தால் ஏளனமாகப் பார்க்கப்பட்டபோதிலும் அவர் தன்னை வழி மாற்றிக்கொள்ளவில்லை. விஷயம் என்னவென்றால், அவர்கள் எப்போதாவது தம் வரைகோட்டுத் திறனை வெளிக்காட்டு சந்தர்ப்பம் நேரும்போது பார்த்தால் அவர்களது பலவீனமும் வெளிப்படுவதைப் பார்த்திருக்கிறேன். வரைகோடுகளின் ராஜ்யத்தில் ஆதிமூலம் மன்னன். அவரது வரைகோட்டுச் சித்திரங்கள் தம்மில் முழுமை பெற்றவை. நாடகார்த்தம், வீரியம், கொடூரம், மிருக பலம், கவித்வம், மெல்லிய இழையோட்டம் ஆகிய எல்லா குணங்களையும் அவை காட்ட வல்லவை. அவை வெளியையும் வெளியை நிரப்பும் திடத்தன்மையும் வெளிக்காட்ட வல்லவை. இவ்வளவுக்கும் ஆதிமூலம் தன்னை தன் இயல்பான வளர்ச்சியில் கண்டவர் தான். வெகு வருடங்களுக்கு அவர் கோட்டுச் சித்திரங்களை விட்டு நகரவில்லை. சில சமயங்களில் வண்ணங்கள் வாங்க பொருள் வசதியின்மையால் தான் என்று சொன்னதாகச் சொல்லப்படுகிறது. அது ஒரு காரணமாக இருந்திருக்கலாம். இருந்தாலும், அது ஒரு குறையாக இருந்ததில்லை. அந்தப் புள்ளியிலிருந்து இன்று அவரது உருவத்தை க் கடந்த வண்ணவெளி என்று சொல்லத்தக்க ஓவியங்கள் வரை அந்த மாற்றத்தின் பாதையை படிப்படியாகப் பார்த்தோமானால், ஒரு மாற்றம் அதன் முந்திய நிலையின் அம்சங்களைக்கொண்டே பிறந்து வெளிப்பட்டுள்ளதைக் காணலாம். எதுவும் முந்தியதை அறவே மறுத்து ஒதுக்கி, புதிதாகப் பிறந்ததல்ல. இயல்பான வளர்ச்சியில் எந்த புதியதும் முற்றிலும் புதியதல்ல. எந்த பழையதும் முற்றிலும் பழையதுமல்ல. பழையதின் குணத்தைக் கொண்டிராத புதியதும் இல்லை. புதியதன் குணத்தைத் தன்னுள் கொண்டிராத பழையதும் ஏதும் இல்லை. ஆதிமூலத்தின் 40 வருட கால ஓவிய வாழ்க்கையே அவரது தன்னின் மலர்ச்சிதான்.
எவ்வெத்துறையிலோ சிற்பிகளை, ஓவியர்களை, கலைஞர்களை நாம் தமிழ் நாட்டில் விருது அளித்து, ஆடிக் கொண்டாடி முடிசூட்டிக் கொண்டாடி வருகிறோம். ஓவியத்துறையில் நாம் பெற்றுள்ள ஒரு தலைசிறந்த கலைஞரை, நாம் கலைஞராக காணவும் இல்லை. ஒரு கட்டத்தில் நாம் விருது பெறாத, ஏதோ ஒன்றிற்கு சிற்பியோ மன்னனோ, அரசோ இல்லாத ஒரு தமிழனைக் காண்பது சிரமமாக இருக்கும் போலிருக்கிறது. ஆனால் ஒரு கலைமாமணியாகக் கூட ஆதிமூலத்தை நாம் காணவில்லை. உண்மையில் பார்க்கப் போனால், அரசியல் சார்பு இருந்தால் ஒழிய ஓவியர்களும் சிற்பிகளும் தமிழ் நாட்டு அரசுகளுக்கு பெருமைப் படும் ஜீவன்களாகத் தெரியவில்லை. ஆனால் எனக்குத் தோன்றுகிறது. அரசும் வாணிகமும், அரசியலும் இதில் தலையிடாதது நல்லதாகத்தான் இருந்திருக்கிறது. இல்லையெனில் சினிமாவிலும் (இது தான் தமிழ் நாட்டுக் கலை) நாடகத்திலும், இலக்கியத்திலும் நேர்ந்த பாமரத்தனமான விளைவுகளை ஓவிய சிற்ப உலகிலும் கண்டிருப்போம். எல்லாத் துறைகளிலும் இது போன்று அரசிடமிருந்தும், அரசியல் வாதிகளிடமிருந்தும் ஒரு காருண்யமிகுந்த அலட்சியம் (benign neglect) இருந்திருந்தால் எத்தனையோ பேரரசுகள், மன்னர்கள், திலகங்களிடமிருந்து தமிழ் நாடு தப்பிப் பிழைத்திருக்கும்.
ஆனால், ஆதிமூலம் இது பற்றியெல்லாம் கவலைப்பட்டவரில்லை. அது பற்றிய சிந்தனையே அவருக்கு இருந்ததில்லை. ஒரு கட்டத்தில் திருக்குறள் ஒன்றிற்கு அவர் ஏன் ஓவியம் வரைந்து கொடுத்தார் என்று நான் எண்ணியதுண்டு. அவர் அதை அமைதியாக மறுத்திருக்க முடியாது என்றே தோன்றுகிறது. அந்த கலவரத்தை அவர் விரும்பாத காரணத்தால் தான் அவர் இயல்புக்கு விரோதமான ஒன்றைச் செய்தார் என்றும் தோன்றிற்று. அவர் பந்தா அற்றவர் மட்டும் அல்ல. அமைதியானவர். அமைதியாக, தன் இயல்புக்கான செயல்களைச் செய்து வாழ்ந்தவர். யாரிடமும் அவர் கோபம் கொண்டதாக, எது பற்றியும் அவர் சீற்றம் கொண்டதாக செய்தியில்லை. நான் தில்லியில் இருந்த காலத்தில் அவர் மத்திய லலித் கலா அகாடமிக்கான் சில பொறுப்புகளை வகித்ததுண்டு. அது அவரை வந்தடைந்தது அபூர்வமே. வட இந்தியர்கள் அவ்வளவு சுலபமாக விட்டுக்கொடுக்க மாட்டார்கள். அப்போதெல்லாம் அவர் அலட்சியத்துடன் ஒதுக்கப்பட்டு வந்த தென்னிந்திய ஓவியர்கள் சிற்பிகளை கவனத்தில் கொண்டு வர முயன்ற காரணத்தாலே வட இந்தியர்களிடையே சச்சரவுக்காளானார் என்று தெரிந்தது. எது பற்றியும் அவருக்குக் கவலை இல்லை. எந்த பதவியையும் பரிசையும், விருதையும், கௌரவத்தையும் அவர் நாடிச் சென்றதில்லை. அவர் அடைந்த வெற்றிகள் அவர் படைப்புகளுக்குக் கிடைத்த வெற்றி. அவர் படைப்புகள் அவரது ஆளுமையின் வெளிப்பாடுகள். வியாபார வெற்றி அவரை வந்தடைந்ததே தவிர அதை நாடி அவர் தன் படைப்பின் அதற்கான வழிமுறைகளைத் தேடியவரில்லை. இப்படி இந்திய பரப்பளவில் எத்தனை கலைஞர்களைப் பற்றிச் சொல்லமுடியும் என்று தெரியவில்லை.
ஒரு புள்ளிதான் தன் விகசிப்பில் பிரபஞ்ச பரிமாணம் பெறுகிறது என்றேன். தன் சிறுவயது கீராம்பூர் கோவிலும் அதன் சுவர் ஓவியங்களும், சுதைச் சிற்பங்களும், கிராமக் காட்சிகளும் மக்களும் என்று தொடங்கி சென்னை கலைக் கல்லூரி வாழ்க்கையின் காட்சிகளும் மனிதர்களும் (ராமானுஜம்), தான் வியந்த பிக்காசோக்களும், செகாலும், காந்தியும், மகாராஜாக்களும் என்று கடந்து, விரிந்த வெளியும் அதில் மிதக்கும் உருவங்களும் என அந்தப் புள்ளிதான் இப்படி பரிமாணம் பெற்றுள்ளது.
ஆதி மூலம் நிறைய படைப்புகளை, ஓவியக் கூடங்களில், வணிக நிறுவனங்களில், தனி நபர்களிடம், இந்திய, அன்னிய நாட்டு கலைக்கூடங்களில் விட்டுச் சென்றிருக்கிறார். அவை மொத்தமும் தமிழரின் கலைத் திறனுக்கு அடையாளமாக இருக்கும். அவ்வாறு கருதப்படும் ஒரு காலம் வரும். பிக்காஸோ ஸ்பெயினுக்கும் வான் கோ டச்சுக்கும் அடையாளமாகியிருப்பதைப் போல.
வெங்கட் சாமிநாதன்/17.1.08

No comments: